Suganthini Ratnam / 2011 நவம்பர் 23 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
கற்பிட்டி பள்ளிவாசல்த்துறை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர்.
கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 40 மற்றும் 26 வயதுடைய இரு நபர்களே இந்த விபத்தில் பலியானார்கள்.
இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வானொன்றுடன் மோதியே இந்த விபத்து சம்பவித்ததாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
வான் சாரதியைக் கைதுசெய்துள்ள கற்பிட்டி பொலிஸார், அவரை புத்தளம் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago