2025 ஜூலை 12, சனிக்கிழமை

மட்டு. இலங்கை வங்கிக்கிளை ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

இலங்கையிலுள்ள வங்கி ஊழியர்கள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டக் கிளை அங்கத்தவர்களின் 9 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் பண கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன்,  ஓய்வு பெற்ற 63 வங்கி ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டக்கிளையின் தலைவர் எம்.ஜே.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் இலங்கையிலுள்ள வங்கி ஊழியர்கள் அமைப்பின் தேசிய மட்டத்திலான தலைவர் அமரபால கமகே, பிரமுகர்கள், முக்கியஸ்த்தர்கள், அதன் அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .