Kogilavani / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவைச் சேர்ந்த மூதாட்டியொருவருவர் தன்னுடைய 82 வயதில் மிகச்சிறந்த குங்பூ வீராங்கனையாக விளங்குகிறார். அவரது குங்பூ திறமையை பார்த்து ரசிகர்கள் மெய்சிலிர்த்துப்போயுள்ளனர்.
ஸாவோ யூபாங் என்ற மூதாட்டியே தனது 82 வயதிலும் குங்குபூ கலையில் தனது திறமையை காண்பித்து வருகிறார். சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவில் அவர் ஒவ்வொரு நாளும் குங்பூ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார்.
அவர் குங்பூ, தாய், ச்சி போன்றவற்றில் மாஸ்டராக விளங்குவதுடன் கடந்த 70 வருடங்களாக யோகாசனக் கலையையும் பயின்று வருகிறார்.
'நான் எப்போதும் சாதாரண வாழ்க்கையே வாழந்து வந்தேன். நான் மாமிசம் உண்பதை தவிர்த்து நீண்ட காலமாகிவிட்டது. அவை என்ன சுவையில் இருக்கும் என்பதுக் கூட எனக்கு மறந்துப் போய்விட்டது. நான் ஒவ்வொரு நாளும் 3 மணித்தியாலங்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வேன்' என்று அவர் விபரித்துள்ளார்.
'நான் சிறுமியாக இருக்கும் போது எனக்கு குங்பூ கலையை கற்பித்துக் கொடுப்பதற்கு ஆசிரியர் எவரும் இருக்கவில்லை. எனவே நான் சுயமாகவே அதைக் கற்றுக் கொண்டேன். மற்றும் நான் பாடசாலைக்கு மீண்டும் செல்லும்போது குங்பூ ஆசிரியரையே தோற்கடித்தேன். அவர் என்னைப்பார்த்து ஆச்சர்யப்பட்டார்' என்று ஸாவோ யூபாங் தெரிவித்துள்ளார்.
2 hours ago
7 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
24 Oct 2025