Princiya Dixci / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை (21) காலை 10 மணியளவில் அரச தனியார் சாரதிகளுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக பிரயாணிகள் சில மணிநேரம் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
கிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பஸ் தரிப்பிடத்தில் தனியார் பஸ் சேவையினர் இன்று முதல் தமது சேவையினை ஆரம்பித்தனர்.
இதன்போது குறித்த பகுதியில் அரச பஸ்கள் சேவையில் ஈடுபட முற்பட்ட போது இரு தரப்பினரிடையிலும் முறுகல் நிலை ஏற்பட்டு, அரச பஸ்ஸில் பிரயாணித்தவர்கள் மீது கல் வீச்சு மேற்கொள்ள முற்பட்டதாக பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.
நீண்ட நேர முயற்சியின் பின்னர் பொலிஸாரினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சேவைகள் வழமைபோல் இடம்பெற்றன.
31 minute ago
43 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
48 minute ago
1 hours ago