2026 மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை

மலையகப் புகையிரதப் பாதைகளைப் புனரமைக்கும் பணிகள் தீவிரம்

Editorial   / 2026 மார்ச் 15 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

Railway track repair work in Sri Lanka hill country

செ.தி.பெருமாள்

மலையகப் புகையிரத மார்க்கத்தில் கண்டி முதல் பதுளை வரையிலான தண்டவாளங்களைப் புனரமைக்கும் பணிகள் புகையிரத ஊழியர்களால் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மலையகப் புகையிரத மார்க்கத்தின் பல இடங்களில் மண்சரிவு மற்றும் தண்டவாளங்கள் தாழ் இறக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் கடந்த சில மாதங்களாக இப்பகுதியிலான புகையிரதப் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தப் பணிகளின் போது பின்வரும் பகுதிகள் முக்கிய கவனம் பெற்றுள்ளன:

  • கண்டி - உலப்பனை: கண்டியின் நுழைவாயில் பகுதியில் உள்ள 'யக்கா' இரும்புப் பாலம் முதல் உலப்பனை வரையிலான தண்டவாளத் தாழ் இறக்கங்கள் சீர்செய்யப்படுகின்றன.
  • நாவலப்பிட்டி - ஹட்டன்: இப்பகுதிகளில் சரிந்து விழுந்த மண் திட்டுகள் அகற்றப்பட்டு வீதிகள் சுத்திகரிக்கப்படுகின்றன.
  • ஹட்டன் - பெரகும்புர: ஹட்டன் முதல் கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டர்ன், உடரதல்ல, நானுஓயா மற்றும் பெரகும்புர வரையிலான பகுதிகளில் சேதமடைந்த பாதைகள் வெகுவாகச் செப்பனிடப்பட்டுள்ளன.

புனரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே மலையக மார்க்கத்திற்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Railway track repair work in Sri Lanka hill country

Railway track repair work in Sri Lanka hill country

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X