Gavitha / 2016 மார்ச் 31 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொமேஸ் மதுசங்க
வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளில் ஒரு தொகுதியினர், நேற்றுப் புதன்கிழமை (30), அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் முன்னாள் போராளிகள் 46 பேர் புனர்வாழ்வு பெற்றுவந்த நிலையில், அவர்களில் 7 பேர், நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏனைய 39 பேரும் தொடர்ந்து புனர்வாழ்வு பெற்று வருகின்ற நிலையில், அவர்களில் பெண்ணொருவரும் அடங்குகின்றார்.
பூந்தோட்டம் புனர்வாழ் நிலையப் பொறுப்பதிகாரி கேணல் ஏ.ஆர்.ஹெமிடோன் தலைமையில், இவர்கள் எழுவரையும் விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago
5 hours ago
7 hours ago