Niroshini / 2016 மார்ச் 17 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதான வீதியை மறித்து மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஒன்று புதன்கிழமை (16) மாலை சாகசக் கண்காட்சியைச் நிகழ்த்தியது.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், இதற்கு முள்ளியவளை போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸாரும் பூரண ஆதரவை வழங்கியிருந்தனர்.
அரைமணி நேரம் தொடர்ந்த இந்த சாகாச கண்காட்சியால், பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டதை சீர்செய்யாமல் சாகாக கண்காட்சி பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
பயணிகள் பஸ்கள் 30 நிமிடங்கள் தரித்து நின்று தாமதமாகவே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அவ்வாறு சென்ற பஸ்கள் நேரக் கட்டுப்பாட்டை சீர்செய்யும் நோக்கில் அவசர அவசரமாக பயணிகளை ஏற்றி இறக்கி சென்றுள்ளனர்.

21 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago