2025 ஜூலை 12, சனிக்கிழமை

மன்னாரில் பெரும்போக நெற்பயிர்ச்செய்கையில் பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 25 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குப்படையான் கிராம மக்கள் மேற்கொண்டுள்ள பெரும்போக நெற்பயிர்ச்செய்கையில் ஒரு வகையான வெளுறல் நோய் ஏற்பட்டுள்ளதால் தாம் இம்முறை பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

கொக்குப்படையான் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் இம்முறை பெரும்போக நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
அண்மையில் பெய்த மழையைத் ;தொடர்ந்து நெற்பயிர்ச்செய்கைக்கு நோய் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .