Super User / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில் 48 ஆயிரத்தி 528 பேர் இதுவரை மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 16 ஆயிரத்தி 769 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்றம் தொடர்பாகத் தெரிவிக்கும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் 86 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதில் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 3 ஆயிரத்தி 577 குடும்பங்களும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்தி 466 குடும்பங்களும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 4 ஆயிரத்தி 484 குடும்பங்களும், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 6 ஆயிரத்தி 242 குடும்பங்களும் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்- என்று கூறினார்.
1 hours ago
4 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
15 Nov 2025