Super User / 2010 நவம்பர் 05 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
1789: அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்க ஆயராக அருட்தந்தை ஜோன் கரோலை பாப்பரசர் 6 ஆம் பயஸ் நியமித்தார்.
1913: தென்னாபிரிக்காவில் இந்திய சுரங்கத் தொழிலாளர்களின் பேரணிக்குத் தலைமை தாங்கிய மகாத்மாக காந்தி கைது செய்யப்பட்டார்.

1941: சோவியத் யூனியன் அதிபர் ஜோஸப் ஸ்டாலின் தனது 3 தசாப்தகால ஆட்சியில் இரண்டாவது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜேர்மனியின் தாக்குதலால் 350,000 படையினர் உயிரிழந்ததாகவும் ஆனால், 45 லட்சம் ஜேர்மன் படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையில் வெற்றி நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
1943: சோவியத் யூனியன் படைகள் கீவ் (உக்ரேன்) நகரை மீண்டும் கைப்பற்றின.
1944: அமெரிக்காவின் ஹன்பார்ட் அணுஉலையில் முதல்தடவையாக புளுட்டோனியம் தயாரிக்கப்பட்டது. பின்னர், இப்புளுட்டோனியம் ஜப்பானின் நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.
1962: தென்னாபிரிக்க நிற வெறி ஆட்சியைக் கண்டித்து ஐ.நா.பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.
1965: அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் கியூப நாட்டவர்களை விமானம் மூலம் கொண்டுசெல்வதற்கு இரு நாடுகளும் இணங்கின. 1971 ஆம் ஆண்டளவில் 250,000 கியூப நாட்டவர்கள் இத்திட்டத்தின்மூலம் பயனடைந்திருந்தனர்.
1986: பிரிட்டனில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தொன்றில் 45 பேர் பலியாகினர்.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026