2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பிள்ளையானின் மறியல் நீடிப்பு

Yuganthini   / 2017 ஜூன் 07 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை, எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதிக்கு, மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் ஒத்திவைத்தார்.

அத்துடன், இந்தப் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களது விளக்கமறியலையும், அன்றைய தினம் வரை நீடிக்கவும், நீதிபதி உத்தரவிட்டார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில், கிழக்கின் முன்னாள் முதலமைச்சர், அவரது கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், வினோத் எனப்படும் வெலிக்கந்தையை சேர்ந்த மதுசங்க என்பவரும், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நிலையிலேயே, சந்தேகநபர்கள் ஐவரதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி, மட்டக்களப்பு புனித மரியாள் இணைப்பேராலயத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .