2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் வீட்டு உரிமையாளரை தாக்கிவிட்டு திருட்டு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ.ஹஸைன்,ரி.லோஹித், சுக்ரி)

வீட்டு உரிமையாளரை கத்தியால் வெட்டிவிட்டு அவ்வீட்டிலிருந்த பணம், நகை உள்ளிட்டவை திருடப்பட்டுள்ள சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.


இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 4 பேரை பொலன்னறுவையில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கத்தி வெட்டுக்குள்ளாகி படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குணரெத்தினம் ஹரிதரன் (வயது 33) என்பவரே இவ்வாறு கத்தி வெட்டுக்குள்ளானவராவர்.

மட்டக்களப்பு - திருகோணமலை வீதியிலுள்ள வீடொன்றிலேயே  நேற்று சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தங்கநகைகளும் 53,000 ரூபா பணமும் 2 மடிக்கணினிகளும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது இரு கைகளிலும் தலையின் பின்பகுதியிலும் கத்தியால் வெட்டி விட்டு திருடப்பட்ட பொருட்களுடன் வெள்ளை வானில் தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .