Editorial / 2019 பெப்ரவரி 01 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தை அடுத்து, கார்த்தியுடன் 'தேவ்' திரைப்படத்தில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங். சூர்யாவுடன் நடித்து வந்த 'என்ஜிகே' திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், 'என்ஜிகே' திரைப்படம் குறித்து தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ள ரகுல் பிரீத் சிங், சூர்யாவுடன் இணைந்து நடித்ததில் பெருமை அடைவதாகவும் இரசிகர்களைப் போன்று, தானும் அந்தத் திரைப்படத்தை, தியேட்டரில் பார்க்க ஆவலாகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் நடிப்பில், 'தேவ்' திரைப்படத்தில் நடித்துள்ள ரகுல், அமெரிக்காவில் சொந்தமாக பிசினஸ் செய்யும் பெண் தொழிலதிபராக நடித்திருக்கிறாராம். இந்தத் திரைப்படம், காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.





6 hours ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
05 Nov 2025