2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அண்டை மாநில முதல்வர் செயலில் காட்டுகிறார்; கஸ்தூரி சாடல்

A.K.M. Ramzy   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள முதல்வர் அனைத்தும் செயலில் காட்டுகிறார் என்றும் இங்கு அனைத்துமே விளம்பரம் செய்யப்படுகிறது என்றும் தனது ட்விட்டர் பதிவில் கஸ்தூரி சாடியுள்ளார்.

கொவிட்-19 வைரஸ் அச்சத்தால் மே 3ஆம் திகதி  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக கொவிட்-19 தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை

குறைந்திருந்தாலும், இன்னும் அதிகப்படி நபர்களுக்கு டெஸ்ட் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் வலுத்து வருகிறது. இதனிடையே, பக்கத்து மாநிலமான

கேரளாவில் கொவிட்-19 தொற்றின் எண்ணிக்கை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிகப்படியான டெஸ்ட்களும் செய்யப்பட்டு

வருகிறது. இந்தக் காலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனின்  செயல்பாட்டுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இங்கு தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் கொவிட்-19  தொற்று தொடர்பாக

அறிக்கைப் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:"அறிக்கை விட்டு அழிக்க

முடியுமா கொவிட்-19 அரக்கனை? அண்டை மாநிலத்தில் - 100 முனைப்பு, 0 இறப்பு. 100% வெற்றி,0 விளம்பரம். அதிகம் பேசவில்லை. முதல்வர் பினராயி விஜயன் அனைத்தும் செயலில் காட்டுகிறார். தமிழக தலைவர்கள் 

சுயவிளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே நமக்கு விடிவு"இவ்வாறு கஸ்தூரி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .