2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்த வாரம் நான் தான் வெளியேற்றப்படுவேன் - கமலிடம் ஷெரின்

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் வெளியேறிய நிலையில் இந்த வாரம் அதாவது இன்று, வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படவுள்ளார். 

இன்று வெளியேறுவது தர்ஷன் என்று ஏற்கனவே செய்திகள் கசிந்துள்ள நிலையில் இன்றைய முதல் புரமோவில் ‘எவிக்சனை நான் எதிர்பார்க்கின்றேன்’ என்று ஷெரின் கமலிடம் கூறுகின்றார்.

கவின் பணத்தை வாங்கி கொண்டு சென்றதால் இந்த வாரம் எவிக்சன் இருக்காது என்று எண்ண வேண்டாம் என்றும், வழக்கம்போல் எவிக்சன் உண்டு என்றும், தர்ஷன், லொஸ்லியா, ஷெரின் ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்றும் கமல் கூறினார்.

இந்த நிலையில் ‘இந்த வாரம் நான் தான் வெளியேற்றப்படுவேன் என எதிர்பார்க்கின்றேன்’ என்று ஷெரின் கூற, அப்படியென்றால் உங்களுக்கு ஒரு வேலை கொடுக்கின்றேன்’ என்று கமல் கூறுவதோடு இன்றைய முதல் புரமோ முடிவடைந்துள்ளது.

அடுத்தடுத்த புரமோக்களில் இன்று வெளியேறுவது யார்? என்பது குறித்த தகவல் இருக்கும் என்றும், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே இன்று வெளியேறுவது யார்? என்பதை உறுதி செய்ய முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .