2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

Editorial   / 2018 ஜூலை 09 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொமேஷ் மதுசங்க

யாழ்ப்பாணம், மணியந்​தோட்டம் பிரதேசத்தில், பற்றைக்காட்டுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில், அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம்,​ பொலிஸ் விசேட அதிரடிப்படை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே, இந்த வெடிபொருட்கள் நேற்று (08) மாலை மீட்கப்பட்டுள்ளன.

அவ்விடத்தில், மீட்கப்பட்ட அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் 744 கிராம் நிறை​கொண்டவை என்றும் விசேட அதிரடிப்படையினர் அறிவித்தனர்.

இதேவேளை, வெடிபொருட்களை வெடிக்கவைப்பதற்காக உதவும், சேவை நூல்கள், 3 டெட்டனேட்டர்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் உள்ளிட்ட யுத்த உபகரணங்கள், மேலதிக பரிசோதனைக்காக, யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் பதில் கட்டளை அதிகாரி, பொலிஸ் பரிசோதகர் எம்.பீ.இலங்கசிங்ஹ தலைமையிலான அதிகாரிகளே, இந்த வெடிபொருட்களையும், யுத்த உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .