2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளைஞன் பலி

Editorial   / 2018 ஜனவரி 06 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவ , காஸ்லன்ட் தோட்டப் பிரதேசத்தில், நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஹெரிஸ்லன்ட் தோட்டம் , கோனபீனுவல பிரதேசத்தை சேர்ந்த  17 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தாக்குதலில் படுகாயங்களுக்கு உள்ளான நபரை, ஆராச்சிகந்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர், ​மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், 16 வயதான நபரொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .