2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கொடுத்தால்தான் கிடைக்கும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவரது நாணயம் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் மூலம் அளவு செய்யப்படும். 

அசைக்க முடியாத நேர்மை திரிபுபடுவதேயில்லை. கஷ்ட, நஷ்டங்க​ள் ஏற்படுவதுகூட, ஒருவரின் மனத்தைரியத்தை பரிசோதனைக்கு உட்படுத்துவதுதான் என உணர்ந்தால், புத்தி கோணலாகும் சந்தர்ப்பமே வராது.  

நல்லவை மட்டும் வாழ்க்கையில் ஏற்படாது. கெட்ட துன்பங்களும் குறுக்கே வந்து நிற்கும். எல்லாமே நடப்பதுதானே வாழ்க்கை. இந்த நிக​ழ்வுகள் எமக்கு மட்டுமல்ல சகலருக்குமான பொதுமைதான்.  

உங்களுக்கு ஏற்படும் இன்னல்களின் வலிமையை உணர்ந்தால், பிறருக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு அதை நீக்க முன்வருவார்கள். இதுவே உண்மையான மனிதாபிமானம்.  

கஷ்டப்படுபவர்களுக்கு இஷ்டத்துடன் உதவினால், உங்கள் கவலைகள் களையப்படும். கொடுத்தால்தான் கிடைக்கும்.  

   வாழ்வியல் தரிசனம் 04/08/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .