2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

திருக்கோவில் முருகன் ஆலய கொடியேற்றம் நாளை மறுநாள்

Editorial   / 2018 ஜூலை 23 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய சங்காபிஷேகம், நாளை (24) இடம்பெற்று, ஆலய பிரதம குரு சண்முக மகேஸ்வரர் குருக்கள் தலைமையில், நாளை மறுநாள் புதன்கிழமை (25) கொடியேற்றம் இடம்பெறவுள்ளது.

ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம், கடந்த மாதம் 25ஆம் திகதி இடம்பெற்றதைத் தொடர்ந்து, மண்டலாபிஷேகம், கிரியைகள் இடம்பெற்று வந்தன.

நாளை மறுநாள் கொடியேற்றத்தைத் தொடர்ந்து, 18 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை, அடியமாவாசைத் தீர்த்த உற்சவமும் மறுநாள் (12) பூங்காவனத் திருவிழாவும் இடம்பெற்று, வைரவர் பூசையுடன் ஆலயத் திருவிழா நிறைவு பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .