2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வேலையற்ற பட்டதாரிகள் இன்றும் போராட்டம்

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் சங்கம் ஆகியன ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று (24) தொடர்கின்றது.

கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நேற்று (23) முதல் இந்த  எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

அரச தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பாளர்கள் நேற்று காலை ஒன்றுகூடினர்.

அங்கிருந்து அவர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை அண்மித்து செல்லும் போது பொலிஸார் தடையேற்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .