2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு

Editorial   / 2018 நவம்பர் 09 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜன் ஹரன்

 

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையால் மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு உள்ளிட்ட தாழ்நிலப்பகுதிகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும்  பாதிப்படைந்துள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாழ்நிலப்பிரதேசங்கள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், குடியிருப்புகளும் பாதிப்படைந்துள்ளன.

இதேவேளை,பாடசாலைகளிலும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் பரீட்சைக்காக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் பாரிய அசௌகரியங்குள்ளாகியுள்ளனர்.

மழை நீடிக்கும் பட்சத்தில் அனர்த்தத்தைத் தவிர்க்கும் முகமாக ஆலையடிவேம்பின் நீர்வடிந்தோடும் முகத்துவாரப்பிரதேசம் வெட்டப்பட்டு நீர்வடித்தோடிய வண்ணமுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .