2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பைஷல் இஸ்மாயில்   / 2017 டிசெம்பர் 09 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி குரூஸ் நீர்த்தேக்க கால்வாய் அருகாமையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், நேற்று (8) கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சலடம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பொதுக்களால் சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சடலம்  மீட்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்கவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை, சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .