2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்முனை மாணவி இந்தோனேசியா பயணம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2020 ஜனவரி 09 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் பங்குபற்றுவதற்காக, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கின்ற மாணவி இனாம் மௌலானா பாத்திமா ஷைரீன், இம்மாதம் 12ஆம் திகதி இந்தோனேசியா பயணமாகிறார்.

தேசிய விஞ்ஞான மன்றத்தால் கொழும்பில் நடத்தப்பட்ட அகில இலங்கை ரீதியான விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியின் இறுதிச்சுற்றில் பங்குபற்றிய இம்மாணவி, இந்தோனேசியாவின் ஜாவா பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 13ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

இவர், கல்முனை கடற்கரைபள்ளி வீதியைச் சேர்ந்த இனாம் ஷக்காப் மௌலானா - மௌலவி அப்துல் கனி மஜ்மலா தம்பதியரின் புதல்வியாவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .