2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிராமங்களை இணைக்கும் பாலங்களை அமைக்க நடவடிக்கை

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமங்களை இணைக்கும் நோக்குடன் 4 பாலங்களை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையை, உள்ளுராட்சி, மாகாண சபைகள், விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய, மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், பொத்துவில் அல்-ஹுதா கிராமத்திலிருந்து ஆத்திமுனை, சர்வோதயபுர கிராமம், செங்காமம் கிராமங்களை இணைக்கக்கூடிய 2 பாலங்களும்; கிராங்கோவ ஓடயாறு பாலம், புதுக்கண்ட கிணத்தடி வட்டைப்பாலம் போன்றவை நிர்மாணிக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .