2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சலவைத் தொழிலாளி கௌரவிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுமார் 40 வருடங்கள் சலவைத் தொழிலை மேற்கொண்டுவரும் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த அழகையா அருணாச்சலத்தின் சேவையைப் பாராட்டி, அக்கரைப்பற்று முஸ்லிம் சமூகத்தின் சார்பில் (எஸ்.எப்.எச்) மனிதத்தை வளர்க்கும் அமைப்பு ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு, அக்கரைப்பற்று - மென்கோ காடன் மண்டபத்தில் நடைபெற்றது.

மனிதத்தை வளர்க்கும் அமைப்பின் சார்பில் கே.எல்.மர்சூக் தலைமையில், “மத, இன பேதம் கடந்து மனிதத்தை நேசிப்போம்” எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, டொக்டர் கே.எல்.எம்.நக்பர் பொன்னாடை போர்த்தியதுடன், அக்கரைப்பற்று றஸ்பாஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.கே.றிப்கான் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .