2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜெய்க்கா வீடுகள் கையளிப்பு

எஸ்.கார்த்திகேசு   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை - பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில், ஹிச்றாநகர் கிராமத்தில் அமைந்துள்ள ஜெய்க்கா 50 வீடுகளுக்கான திறப்புகள், பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நஸீரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா பிரதம அதிதியாகக் கலந்தகொண்டு, பயனாளிகளிடம் வீடுகளுக்கான திறப்புகளைக் கையளித்தார்.

இவ் வீட்டுத் திட்டத் தொகுதியில் 50 வீடுகள் தனித்தனியாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், வீட்டுத்திட்டத்துக்கான பாதைகள், வைத்தியசாலை, பள்ளிவாசல் உள்ளிட்ட மாதிரிக் கிராமமாக அமையப் பெற்றுள்ளதுடன், அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஒத்துழைப்புடன் இவ்விட்டுத்திட்டம் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .