2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஒக்டோபர் 13 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவகத்தை (சைட்டம்)இரத்துச் செய்யுமாறும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள 03 மாணவர்களை விடுதலை செய்யுமாறும் கைதைக் கண்டித்தும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான வீதிக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (13) பிற்பகல் 01.30 மணியளவில் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் ஆரம்பித்த இக்கவனயீhப்பு போராட்டம் 02.30 வரை இடம்பெற்றது.

"சைட்டத்தை இரத்துச் செய், மாணவர்களை துன்புறுத்தாதே, மணவர்கள் மீதான அடக்கமுறை நிறுத்து, கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்" போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .