Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 07 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை,
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு
நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி வருகின்றன.
மதுரை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட் டவர்களின் எண்ணிக்கை 4,380 ஆக இருந்தது.
மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4640 ஆக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை 1070 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது வரை 3199 பேர் நோய் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் 200 க்கும் மேற்பட் டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
* இதனைதொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இன்று ஒரே நாளில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,783 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,715 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
3 hours ago
7 hours ago