2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரஷ்ய வான் தாக்குதல்களில் இட்லிப்பில் ஆயுதக்குழு உறுப்பினர்கள் 50 பேர் பலி

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


வட சிரியாவில் பிரதானமாக எதிரணியின் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப் மாகணத்தில் ரஷ்ய வான் தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்ட துருக்கியால் ஆதரவளிக்கப்பட்ட ஆயுதக்குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, குறித்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 

பய்லக் அல்-ஷாம் என்றழைக்கப்படும் இஸ்லாமிய ஆயுதக்குழுவொன்றுக்கான பயிற்சி முகாமொன்றே தாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 78 பேர் உயிரிழந்ததாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, காயமடைந்த சிலர் மோசமான நிலையில் இருப்பதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கையானது அதிகரிக்கலாம் என கண்காணிப்பகம் மேலும் கூறியுள்ளது. 
இட்லிப் நகரத்துக்கு வடமேற்காகவுள்ள ஹரெம் பிராந்தியத்திலேயே இத்தாக்குதல் இடம்பெற்றிருந்தது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .