2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சவூதியின் தாக்குதலில் 9 பொதுமக்கள் பலி

Editorial   / 2018 ஜனவரி 25 , மு.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனின் வடக்குப் பகுதியில், சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியால் நடத்தப்பட்ட தாக்குதலில், 4 சிறுவர்கள் உட்பட 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என, அங்கு வசிப்பவர்களும் சுகாதாரத் துறையினரும் குறிப்பிடுகின்றனர். கொல்லப்பட்டவர்களுக்கு மேலதிகமாக, 3 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல்கள், நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டன என அறிவிக்கப்படுகிறது.

இதே கூட்டணியால், கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டிருந்த தாக்குதல்களில், 21 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாட்களில் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பயணித்துக் கொண்டிருந்த வாகனமொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என, அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு, காயமடைந்தவர்களில் இருவர், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .