2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘நைகர் கிராமங்கள் மீதான தாக்குதல்களில்137 பேர் கொல்லப்பட்டனர்’

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 23 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்மேற்கு நைகரிலுள்ள கிராமங்கள் மீதான ஒருங்கிணைந்த தாக்குதல்களில், 137 பேரை, ஆயுதந்தரித்த தாக்குதலாளிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொன்றதாக, அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் வேளையில் தாக்குதலை நடத்திய அடையாளங்காணப்படாத தாக்குதலாளிகள், மாலியுடன் எல்லையைக் கொண்டுள்ள தஹுவாவிலுள்ள மூன்று கிராமங்களையும், ஏனைய குக்கிராமங்களையும் தாக்கியதாக, அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, 60 பேரளவிலேயே கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் மதிப்பிட்டிருந்தனர்.

இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை பாதுகாப்புத் தகவல் மூலம் சாடியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .