2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரான்ஸில் போராட்டங்கள் வலுவிழந்தன

Editorial   / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் “மஞ்சள் அங்கி” போராட்டங்கள், கடந்த வாரயிறுதியிலும் தொடர்ந்திருந்தன. ஆனால், இதற்கு முன்னைய 4 வாரயிறுதிகளோடும் ஒப்பிடும் போது, நேற்றும் நேற்று முன்தினமும், போராட்டங்கள் வலுவிழந்திருந்தன.

போராட்டங்களுக்குத் தலைவணங்கி, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பல வேலைத்திட்டங்களை அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே, அவற்றின் பலம் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் உள்விவகார அமைச்சர், இப்போராட்டங்கள் தொடர்பான சம்பவங்களில், இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .