2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாலியில் 9 பேர் பலி

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலியில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகளின் இரண்டு தளங்கள் மீது, ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், ஒன்பது பேர் பலியாகினர்.

இதில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர், அமைதிகாக்கும் படைவீரர் எனவும், இன்னுமொருவர் ஒப்பந்தக்காரர் எனவும் ஏனைய 7 பேரும், மாலியைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிகள், கிரனேட்கள் ஆகியவற்றைக் கொண்டு, ஒரு தளத்தைத் தாக்கிய ஆறு பேர், பாரிய அழிவை ஏற்படுத்தினர். அவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 5 பேர், ஒரு பொலிஸ் அதிகாரி, ஓர் ஒப்பந்தகாரர் ஆகியோரைக் கொன்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .