2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பியனானது மேல் மாகாணம்

குணசேகரன் சுரேன்   / 2018 ஜூலை 24 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டுத்துறை மாகாண சபை, உள்ளூராட்சி அமைச்சு, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் ஆகியன இணைந்து நடத்திய தேசிய மட்ட, மாகாண ஆண் அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டத் தொடரில் மேல் மாகாணம் சம்பியனாகியது.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவுக்கு பின்னால் அமைந்துள்ள யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்டத் திடலில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் இடம்பெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், கிழக்கு மாகாணத்தை எதிர்கொண்ட மேல் மாகாணம், 77-45 என்ற புள்ளிகள் வென்று சம்பியனாகியது.

இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக 21 புள்ளிகளைப் பெற்ற மேல் மாகாணத்தின் சுரத் தெரிவானார்.

மூன்றாமிடத்துக்கான போட்டியில், மத்திய மாகாணத்தை வென்ற வட மாகாணம் மூன்றாமிடத்தைப் பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .