2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பிரட்பி கேடயத்தைக் கைப்பற்றியது றோயல்

Editorial   / 2017 ஜூன் 04 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

லீக் சம்பியன்களாக, அண்மையில் முடிசூடிக் கொண்ட றோயல் கல்லூரி, றோயல் வளாகத்தில், நேற்று  (03) இடம்பெற்ற பிரட்பி கேடயத்தின் இரண்டாவது சுற்றுப் போட்டியிலும் வெற்றிபெற்று, பிரட்பி கேடயத்தைக் கைப்பற்றிக்கொண்டது.   

பிரட்பி கேடயத்தின் முதலாவது சுற்றுப் போட்டியில், 22-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, ஐந்து புள்ளிகள் முன்னிலையிலிருந்த றோயல், இரண்டாவது சுற்றுப் போட்டியில், 13-08 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, மொத்தமாக, 35-25 என்ற புள்ளிகள் கணக்கில், பிரட்பி கேடயத்தைக் கைப்பற்றிக் கொண்டது.   

றோயல் சார்பாக, சசித கருணாரட்ன, ஹிமந்த ஹிருஷன் ஆகியோர் தலா ஒவ்வொரு ட்ரையைப் பெற்றதோடு, மொஹமட் ஷகிர், ஒரு பெனால்டியைப் பெற்றிருந்தார். திரித்துவக் கல்லூரி சார்பாகப் பெறப்பட்ட ட்ரையை, அவிஷ்க பிரியங்கர பெற்றதோடு, பெனால்டியை லஷனே விஜேசூரிய பெற்றிருந்தார்.   

நேற்றுக் காலையில் பெய்த பலத்த மழை காரணமாக, சகதி நிலைமைகளிலேயே, குறித்த போட்டி இடம்பெற்றிருந்த நிலையில், சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட அணி முயற்சி, சிறப்பான தடுப்பாட்டத்தாலேயே றோயல் வெற்றிபெற்றுக் கொண்டது. போட்டி ஆரம்பித்தவுடன், திரித்துவக் கல்லூரி முன்னிலையில் இருந்தபோதும், றோயலின் தடுப்புகளை, திரித்துவக் கல்லூரி தாண்டியிருக்க முடியவில்லை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .