2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அல் ஹுஸைன்- ஜனாதிபதி சந்திப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 23 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நியூயோர்க் நகரில் நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் சபையின், 72ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில், பங்கேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அல் ஹூஸைனை, நேற்றுமாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின், 72ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 20 திகதி உரையாற்றினார்.  

இந்நிலையில், அன்றையதினம், நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றியிருந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தன, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹூஸைன், இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்க முயற்சித்திருப்பதாக, குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .