2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ அழைத்தால் செல்வேன் ‘

Editorial   / 2019 ஜூன் 25 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்து வரும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு தனக்கு அழைப்பு விடுத்தால், அதில் சாட்சியமளிக்க செல்வதாக, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

 தனக்கு இதுவரை அழைப்பு கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், அழைப்புக் கிடைத்தால் கண்டிப்பாக செல்வேன் என்றும், அது தனது கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் மக்களைத் தெளிவுப்படுத்துவது தான் இந்த விசேட தெரிவுக்குழுவின் நோக்கம் எனத் தெரிவித்துள்ள அவர், எதிர்க்கட்சியின்  தெரிவுக்குழு தொடர்பில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டாலும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சகலரும் இது சிறந்த விடயமென கலந்துரையாடியதுடன், அனைவரும் இதற்கு இணக்கத்தையும் தெரிவித்திருந்ததாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .