2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இ.போ.ச. முறைகேடுகளை ஆராய குழு நியமனம்

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபையின்  கீழுள்ள டிப்போக்களில் இடம்பெறும் பல்வேறு முறைக்கேடுகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவை நியமிக்குமாறு, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவுக்கு, அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியதற்கு அமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தாக,  அமைச்சு தெரிவித்துள்ளது.

 இலங்கை போக்குவரத்து சபை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், குறித்த குழுவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக, போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் திலக்கரத்ன பண்டார நியமிக்கப்படவுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .