2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இறக்குமதி பால்மாவுக்கு விலைத் சூத்திரம்

Editorial   / 2019 ஜனவரி 24 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு, எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், விலைச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பால்மா விலை தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக, நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்தது.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு, பல நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில், குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிதி அமைச்சின் பிரதிநிதிகள், கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் அதிகாரசபையின் பிரதிநிதிகளுக்கு இடையில், விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போது, எரிபொருள்களுக்கான விலை நிர்ணத்தைப் போன்று, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைக்காகவும், விலைச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், அதனை, எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதிக்குள் தயாரிக்குமாறு, நுகர்வோர் அதிகாரசபைப்பு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேசச் ச​ந்தையில் காணப்படும் பால்மாவின் விலைகளுக்கேற்ப, உள்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலையை நிர்ணயிக்கும் வகையில், இந்த விலைச் சூத்திரம் தயாரிக்கபடவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .