2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'இலங்கையை ஏழ்மையில் வைத்திருக்க இடமளிக்க முடியாது'

Editorial   / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்றுமதி பொருளாதாரத்தின் ஊடாக சர்வதேசத்துடன் இணைந்து நாடு தானாக முன்னோக்கி செல்வதா? அல்லது தனித்திருந்து பின்னோக்கி செல்வதா? என்ற பிரச்சினையே நிகழ்காலத்தில் தீர்க்கப்படணே்டிய முக்கிய பிரச்சினையாக உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரஜரட்ட மற்றும் கோட்டை காலப்பகுதிகளில் காணப்பட்டதை போல ஏற்றுமதியின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தந்திரிமலையில் இடம்பெற்ற நிகழ்வின்போது உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை தொடந்தும் ஏழ்மை மற்றும் கடன் பிரச்சினை உள்ள நாடாக காணப்படுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அந்த நிலையை மாற்றி சக்திவாய்ந்த மற்றும் சிறப்பான நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .