Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று பிரதான பெருந்தோட்ட நிறுவனங்கள் இதுவரைக்காலம் ஊழியர் சேமலாப நிதியினை செலுத்த தவறியுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய 1,702 மில்லியன் ரூபா நிதி தொழில் அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக செலுத்தப்படவுள்ளது.
குறித்த பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான 10 தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த நிதி கிடைக்கப்பெறவுள்ளது.
தேசிய தொழில்ஆலோசனை சபையில் கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தகவல் வெளியானதாக தொழில் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதி செலுத்தாமை தொடர்பான முறைப்பாடுகள் தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து தொடர்ந்து தொழில் அமைச்சுக்கு கிடைக்கப்பெற்று வருவதாகவும், அதனடிப்படையிலேயே மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
40 minute ago
2 hours ago
7 hours ago