2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஐ.தே.க செயற்குழு நாளை கூடுகிறது

Editorial   / 2018 மார்ச் 21 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், நாளை 22ஆம் திகதி வியாழக்கிழமை கூடவிருக்கின்றது.

கட்சியை மறுசீரமைப்பது தொடர்பில் கையளிக்கப்பட்டுள்ள மூன்று அறிக்கைகள் தொடர்பில், அன்றையதினம் விரிவாக ஆராயப்படுமென, உள்கட்சித் தகவல் தெரிவிக்கின்றது.

கட்சியை உடனடியாக மறுசீரமைப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சீ. அலவத்துவல ஆகியோர் தலைமையில் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டன.

நியமிக்கப்பட்ட அந்த மூன்று குழுக்களின் பரிந்துரைகளில், கட்சியை அடிமட்டத்திலிருந்து புனரமைக்கவேண்டுமென பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளன.

கண்டி பிரதேசத்​தை மையப்படுத்தி இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலை காரணமாகவே, கட்சியை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் காலதாமதமாகிவிட்டிருந்தன என கட்சித் தகவல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .