2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பக்க வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது

Editorial   / 2019 பெப்ரவரி 21 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பக்க வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசியத் திருத்தப் பணிகள் காரணமாகவே இவ்வாறு தற்காலிகமாக மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள, வாகனங்களின் வேகத்தை மட்டுபடுத்தி, ஒரு பக்க பாதையில் பாதுகாப்பாக வாகனங்களைச் செலுத்துமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த மாதம் நிறைவடையும் வரை குறித்த அத்தியாவசிய திருத்தப்பணிகள் முன்னெடுக்கபடும் என்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதி வேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு நடவடிக்கை பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .