Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீன்பிடி நடவடிக்கைக்காக, இரண்டு மீன்பிடி படகுகள் மூலம் கடலுக்குச் சென்று, காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட மீனவர்கள் நால்வரும், வேறு சில மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (18) அதிகாலை 2 மணிக்கு கடலுக்குப் போன இவர்களை காணவில்லையென சிலாபம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைபாட்டுக்கமைய, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், குறித்த மீனவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளானதாலேயே மீனவர்கள் காணாமல் போயிருந்து, பின்னர் மீனவர்கள் சிலரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட மீனவர்கள் நால்வரும்,27, 29 மற்றும் 33 வயதினரென்றும், இவர்கள் காவடியாவத்த, வட்டக்கல்லி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களெனவும், தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தற்போது மேற்கு கடற்பரப்பு அதிகம் கொந்தளிப்படன் காணப்படுவதால், கடலுக்குச் செல்லுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு, காலநிலை மத்திய நிலையம் எச்சரித்துள்ள நிலையில், இதனை சில மீனவர்கள் கவனத்திற்கொள்ளாமல் மீனபிடிக்கச் செல்வதாலேயே, இவ்வாறான விபத்துகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago
26 Apr 2024