2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொலன்னாவை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்னாவை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன நிலையில் இன்று பிற்பகல் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 14 வயது சிறுமியை தங்கவைத்திருந்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் காணாமல் போன நிலையில் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 19 வயது பெண் மற்றும் அவரது கணவரின் சகோதரியின் காதலன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலன்னாவையில் ஆடை கொள்வனவு செய்வதற்காக சென்ற நிலையில் ஒரு பிள்ளையின் தாயான (19) வயது பெண், அவரின் கணவரின் சகோதரியான 15 வயது சிறுமி மற்றும் அயல் வீட்டைச் சேர்ந்த (14)வயது சிறுமி ஆகியோர் கடந்த 14 ஆம் திகதி காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் பொலிசார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று முற்பகல் 19 வயது பெண் மற்றும் 15 வயது சிறுமி ஆகியோர் வெல்லம்பிட்டி  பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

அத்துடன் இன்று(18) பிற்பகல் 14 வயது சிறுமி கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தமையை தொடர்ந்து இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .