2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’கொள்ளைக் கும்பல் கைது’

Editorial   / 2019 மார்ச் 18 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டி – மண்டகந்த பிரதேசத்தில் ​வைத்து காரொன்றிலிருந்து ஆயுதங்கள் சில பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று  (17) குறித்த பகுதியில் வைத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது, குறித்த கார் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அதிலிருந்து துப்பாக்கிகள், 3 கைக்குண்டுகள், 2 வாள்கள், 4 முகமூடிகள் மற்றும் கையுறைகள் 2 ஜோடியும் கைப்பற்றபட்டதுடன், அதில் பயணஞ்செய்த மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் போலி வாகன இலக்க தகடுகள் இரண்டும் குறித்த காரில் காணப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த நபர்கள் அம்பலங்கொடை மற்றும் ஊருகஹ ஆகிய பிரதேசங்களில் கொள்ளையில் ஈடுபடுவதற்காக வருகை தந்ததாக, தமது ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .