2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கோரா’ பிடித்த 22 பேருக்கும் இன்று வரை விளக்கமறியல்

Editorial   / 2018 ஜனவரி 22 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், எஸ்.சதிஸ்  
சிவனொளி பாதமலைக்கு வருகை தந்திருந்த போது, கேரள கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட 22பேரும், ஹட்டன் பதில் நீதவான் தமயந்தி பெர்ணான்டோவின் உத்தரவின் பேரில், இன்று (22) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள், ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாரினால், சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .  

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள தியகல பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸ் மோப்ப நாயான ‘கோரா’ என்ற நாயின் ஊடாக மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

ஹட்டன், வட்டவளை மற்றும் கினிகத்ஹேன ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளினால், இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.  

கைது செய்யப்பட்டவர்கள், கொழும்பு, மஹரகம, பிலிமத்தலாவ உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த ஹட்டன் பொலிஸார், சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .