Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூன் 15 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு சீயோன் தேவலாயத்தில், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியின் சடலத்தைப் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (15), ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாரதி வீதியிலுள்ள மயானத்தில், குறித்த பயங்கரவாதியின் சடலத்தைப் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இதையடுத்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், டயர்களை எரித்து, வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால், மட்டக்களப்பு பகுதியில் பதற்றம் நிலவியது.
சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த பயங்கரவாதியின் உடலை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு, கடந்த வெள்ளிக்கிழமை (7) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான், அரசாங்க அதிபருக்கு கட்டளை பிறப்பித்திருந்தார்.
இதையடுத்து, பொலிஸார் சடலத்தை மட்டக்களப்பு விமான நிலையப் பகுதியிலுள்ள புதூர், ஆலையடிச்சோலை மயானப் பகுதியில், செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்ய முற்பட்டபோது, அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் சடலத்தை புதன்கிழமை (12) காத்தான்குடி முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய முற்பட்டபோது அங்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வீதியை மூடினர்.
இந்நிலையில், பொலிஸார் நேற்று முன்தினம் மட்டக்களப்பு பொலனறுவை எல்லைப் பகுதியான ரிதிதென்னை இராணுவ முகாமுக்கு அருகிருள்ள காட்டுப் பகுதியில் சடலத்தை புதைக்க முற்பட்டனர். அங்கும் மக்களின் எதிர்ப்பு காரணமாக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டது.
இதேவேளை காத்தான்குடி பகுதியில் குறித்த சடலத்தை புதைப்பதற்கு அனுமதிப்பத்தில்லையென காத்தான்குடி நகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
8 hours ago