2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுவிஸ் பணியாளரின் அலைபேசியை பரிசோதிக்க உத்தரவு

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளரான கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ்  அலைபேசியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு  கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று (21) பிறப்பித்துள்ளார்.

கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ்  அலைபேசியை தற்போது நீதிமன்றின் பொறுப்பில் உள்ளது.

இந்த நிலையில், குறித்த அலைபேசியை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள பரிசோதனைக்கு ஒப்படைக்குமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .