2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுகாதார அமைச்சுக்கு ரூ.9 இலட்சம் நட்டம்

Kogilavani   / 2017 ஜூன் 23 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சின் சுவசிறிபாய கட்டடத்தின் மீது, நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக, சுகாதார அமைச்சுக்கு 9 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, தெரியவருகிறது.

மாலபேயிலுள்ள “சைட்டம்” தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ​மருத்துவபீட மாணவச் செயற்பாட்டாளர்களால், சுகாதார அமைச்சின் சுவசிறிபாய கட்டடம், நேற்று முன்தினம்  சுற்றிவளைக்கப்பட்டதுடன், தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மற்றும் குண்டாந்தடி பிரயோகம் மேற்கொண்டனர். இதனால், அப்பிரதேசமே அல்​லோல கல்லோலப்பட்டது. இதனால், 85 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இச்சம்பத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .